பக்கங்கள்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

அரும்பாவூர் அரசு மேல் நிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்ப கோரி தமுமுக வலியுறுத்தள்.


                          பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கிளை செயலாளர் சமீம் அலி தலைமை வகித்தார். அவை தலைவர் நிஜாமுதீன், மனித நேய மக்கள் கட்சி கிளை செயலாளர் ஷாஜகான், மாணவர் இந்தியா செயலாளர் முகமது அப்பாஸ், கிளைச்செயலாளர் முகைதீன், தொண்டரணி செயலாளர் நவாப்ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் முகமது இலியாஸ் அலி, ஒன்றிய செயலாளர் முகமது உஸ்மான் ஆகியோர் பேசினர். 

கூட்டத்தில், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் காலிபணியிடத்தை நிரப்ப வேண்டும். கல்லூரி, பாலிடெக்னிக் படிக்கும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டால் மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஐதர்அலி, முகமது அதீன், சாதிக்பாட்ஷா, பஷீர் அகமது, ரியாத்அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவரணி செயலாளர் ஜாபர்அலி வரவேற்றார். முகமது அனவி நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக