பக்கங்கள்

வியாழன், 31 மே, 2012

திரை கதை வசனம் எழுதும் இந்திய உளவுத்துறை!?

திரை கதை வசனம் எழுதும் இந்திய உளவுத்துறை!?

புதுடெல்லி: தீவிரவாத குற்றம் சுமத்தி சவூதி அரேபியாவில் வைத்து இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த இளைஞரான பொறியாளர் ஃபஸீஹ் முஹம்மதிற்கு சிவில் உரிமை ஆர்வலர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.
ஃபஸீஹை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர். இக்கோரியை வலியுறுத்தி உள்துறை அமைச்சர், தேசிய சிறுபான்மை கமிஷன் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து அநியாயமாக நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யப்படுவது தொடர்கதையாக மாறியுள்ளது. ஃபஸீஹின் கைது இத்தகைய சம்பவங்களின் ஒரு பகுதியாக காணமுடிகிறது. அண்மையில் மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மி, இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு தொடர்பாக டெல்லி போலீஸ் கைது செய்தது. 

தொடரும் இத்தகைய சம்பவங்கள் முஸ்லிம் சமுதாயத்தை வேதனையில் ஆழ்த்துகிறது என்றும், இவ்விவகாரத்தில் அவசரமாக தலையிட வேண்டும் என்றும் சிவில் உரிமை ஆர்வலர்கள் தங்களது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஷப்னம் ஹாஷ்மி, பேராசிரியர் அனுராதா செனாய் (ஜெ.என்.யு), வழக்கறிஞர் காலின் கான்ஸால்வ்ஸ் (உச்சநீதிமன்றம்), பேராசிரியர் கமல்மித்ரா செனாய், பேராசிரியர் ஜெ.எஸ்.பந்தூக்வாலா (வதோதரா பல்கலைக்கழகம்), எ.கே.கித்வாய் (அசோசியேசன் ஆஃப் ப்ரொடக்‌ஷன் ஆஃப் சிவில் ரைட்ஸ்), அஜீத் ஸாஹி, காஷிஃபுல் ஹுதா, மஹ்தாப் ஆலம் (பத்திரிகையாளர்), கதீஜா ஆரிஃப் (திரைப்படத்துறை),  மனீஷா சேதி (ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன்), டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கான்  ஆகியோர் இம்மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
இல்லாத ஒன்றை உறுவாக்குவதும் இருப்பதை இல்லாமல் ஆக்குவதும் இந்திய காவல்துறை மற்றும் உளவுத்துறை கை வந்த கலை. (திரைப்படத்திற்கு திரை கதை வசனம் எழுதலாம் இந்திய உளவுத்துறை)

 


பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு 159 ரூபாய் மட்டும் வாடகை செலுத்தும் மேற்கு வங்காள அரசு... தொடரும் வக்ஃபு முறைகேடுகள்

பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு 159 ரூபாய் மட்டும் வாடகை செலுத்தும் மேற்கு வங்காள அரசு... தொடரும் வக்ஃபு முறைகேடுகள்

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்களுக்கு மாதம் 159 ரூபாய் மட்டும் வாடகை கொடுக்கிறார்கள். இவர்கள் தாதாக்களோ, ஆதிக்க வெறிபிடித்த பண முதலைகளோ அல்ல. மேற்கு வங்காள மாநில அரசுதான் இத்தகைய சாதனைக்கு(?) சொந்தக்காரனாக விளங்குகிறது.
ஆளுநர் மாளிகையான ராஜ்பவன், தலைமைச் செயலகம் செயல்படும் வில்லியம்ஸ் கோட்டை, சீதாபூர் மதரஸா மற்றும் அதைச் சார்ந்த மைதானம் (ஹூக்ளி மாவட்டத்தில் உள்ளது), இவ்வாறு முக்கிய இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து மேற்கு வங்காள அரசு அற்பசொற்ப வாடகை கொடுத்து வந்தது நாட்டு மக்களை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது.
2555 பிகாசாவுள்ள (511 ஏக்கர்) நிலத்திற்கு மாநில அரசு 159 ரூபாய் மட்டுமே மாத வாடகை செலுத்துகிறது. கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறதல்லவா?
இந்த 159 ரூபாய் மாத வாடகைக் கூட 1999ஆம் ஆண்டு வரைதான் கொடுத்து வந்தது. அதன்பிறகு அதனைக்கூட நிறுத்திவிட்டது. மேற்கூறப்பட்ட வக்ஃபு சொத்துக்களுக்கு முத்தவல்லியான மவ்லவி அபுல் பரகாத் தனது 99ஆம் வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது வாரிசும் மகனுமான அபுநயீம் சித்தீக்கியிடம் ஒரு பைசாகூட அரசால் வழங்கப்படவில்லை.
கொல்கத்தாவின் பல்லாயிரம் கோடி வக்ஃபு சொத்துக்களின் முத்தவல்லி அபூநயீம் சித்தீக்கி...

வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களின் நவாபாக இருந்த நவாப் அலி வர்திகான், சீதாபூர் மஸ்ஜித் மற்றும் மதரஸாவைப் பராமரிக்கும் செலவு வகைக்காக மவ்லவி சம்சுத்தீன் மற்றும் மசியுத்தீன் ஆகிய இருவருக்கும் கொல்கத்தாவின் முக்கியப் பகுதிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த நிலங்களில் பிரம்மாண்டமான அரசு கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்காக மிகப்பெரிய தொகையாக(?) 159 ரூபாய் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது.
எந்த மஸ்ஜித் மற்றும் மதரஸாவின் பராமரிப்புக்காக சொத்துக்கள் வழங்கப்பட்டதோ அந்த நோக்கம் பூர்த்தி செய்யப்படவில்லை. மதரஸாவும், மஸ்ஜிதும் பாழடைந்த நிலையில் உள்ளன என்பதுதான் பெரும் சோகம்.
வில்லியம் கோட்டை, ராஜ்பவன், புகழ்பெற்ற ஈடன் கார்டன் உள்ளிட்ட பானிபவான் மைதானம் முதலிய முக்கிய இடங்கள் அனைத்தும் தங்களது மூதாதையர்களின் சொத்துக்களே என பெருமிதத்துடன் கூறுகிறார். ஆனால் இவர்களது உரிமையை மறுத்து நியாயமான தொகையை வழங்க மறுத்து அரசுகள் வீண் பிடிவாதம் காட்டி வருவதாக வருந்துகிறார்.
வாரன் ஹேஸ்டிங்க்ஸ் காலம் தொடங்கி ஜவஹர்லால் நேரு தொடர்ந்து இந்திரா காந்தி, ஜோதிபாசு போன்றவர்களின் காலங்களில் கூட நியாயம் வழங்கப்படவில்லை.
சீதாபூர் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் 1772ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு மாதம் 158 ரூபாய் வாடகைத் தொகையாய் நிர்ணயம் செய்யப்பட்டதாக அபூநயீம் சித்தீக்கி கூறுகிறார். அதன்பிறகு ஒரு ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அடடா, என்ன நேர்மை? 17ஆம் நூற்றாண்டில் முர்ஷிதாபாத்துக்கு வருகை தந்த நவாப் அலி வர்திகான், ஹூக்ளி மாவட்டத்தில் 15 ஆயிரம் பிகா நிலமும் (3000 ஏக்கர்), ஹவுரா மற்றும் 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் 2555 பிகா நிலங்கள் (511 ஏக்கர்) வழங்கப்பட்டன. இன்று இவை அனைத்தும் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளின் முக்கிய சொத்துக்களாகத் திகழ்கின்றன. ஆனாலும் அநீதிகள் தொடர்கின்றன.
தனி நபர்கள் முறைகேடு செய்தால் அரசாங்கத்திடம் முறையிடலாம். அரசாங்கமே முறைகேடு செய்தால் எங்குபோய் முறையிடுவது? முறையான, நீதியான நிர்வாகம் பற்றி வாய்கிழியப் பேசும் மம்தா பானர்ஜி இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

புதன், 30 மே, 2012

செங்குன்றம் - மமக சமுதாய எழுச்சிப் பொதுக்கூட்டம் (வீடியோ)

செங்குன்றம் - மமக சமுதாய எழுச்சிப் பொதுக்கூட்டம் (வீடியோ) 

 

 

ஈழமும் இஸ்லாமும் - "வின் டிவி" நிகழ்ச்சியில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (video)

மத்திய அரசின் 4.5% இடஒதுக்கீடு பற்றி விவாதம் - புதியதலைமுறையில் மூத்த தலைவர் ஹைதர் அலி

மத்திய அரசின் 4.5% இடஒதுக்கீடு பற்றி விவாதம் - புதியதலைமுறையில் மூத்த தலைவர் ஹைதர் அலி

Wednesday, 30 May 2012 








தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. பேட்டி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. பேட்டி 

 http://tmmk-attur.wapego.com/files/339067/jawahirullahal.jpg


கடந்த ஞாயிறு மே 27 அன்று சிவகங்கையில் நவாப் வாலாஜா ஜீம்ஆ பள்ளிவாசல் சார்பாக 45 நாட்கள் நடைபெற்று வந்த கோடைக்கால இஸ்லாமிய வகுப்புகள் நிறைவு விழாவில் பங்கு கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டி குறித்து தினத்தந்தியில் வெளியான செய்தி:
ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.யும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான ஜவாஹிருல்லாஹ் சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
மத்திய அரசு பெட்ரோல் விலையை ரூ.7.50 கூட்டியுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ள நிலையில் இந்த உயர்வு ஏற்கக்கூடியதில்லை.
பாம்பனில் இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதி பிளஸ்-2 மாணவர் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கோரியுள்ளார். இந்த சம்பவத்தில் கடலோர காவல்படை விசாரணை நடத்துவதற்கு பதிலாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிடவேண்டும்.

வாபஸ்:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற தகவல்கள் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. தமிழக அரசு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்தது கண்டிக்கதக்கது. முல்லைபெரியாறு அணையில் போட்ட துளைகளை அடைக்க விடாமல் தமிழக பொறியாளர்களை கேரள அரசு தடுக்கிறது. எனவே மத்திய அரசு இதில் தலையீட்டு அணையின் துளையை அடைப்பதற்கு உதவிட வேண்டும். அத்துடன் அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு தரவேண்டும்.
டெங்கு காய்ச்சல் தற்போது, அதிகரித்து வருகிறது. ஆனால் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் போதுமான சுகாதார பணியாளர்கள் இல்லாததால் குப்பை மற்றும் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற முடியவில்லை. எனவே தேவையான அளவுக்கு சுகாதார பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைபாடு குறித்து வருகிற 4-ந்தேதி சென்னையில் கூடுகின்ற உயர்நிலை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

பூரண மதுவிலக்கு
தேர்தல் விதிமுறைகளை பொறுத்தவரை மாற்றம் கொண்டு வந்து ஒரு தொகுதியில் எந்த கட்சி சார்ந்த எம்.எல்.ஏ. இறந்து போகிறாரோ, அதே கட்சியை சேர்ந்த வேறு ஒருவரை எம்.எல்.ஏ. வாக தேர்தல் இன்றி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஏற்கனவே லாட்டரி சீட்டுகளை தடை செய்தார். அது போல் தமிழகத்தில் பூரண மது விலக்கையும் கொண்டு வர வேண்டும். அத்துடன் வாய் புற்றுநோயை தடுக்க பான் பராக் மற்றும் புகையிலையை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சையது நகீப், நிர்வாகி இப்ராகீம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.